Friday 3rd of May 2024 12:38:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் மாலுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று!

எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் மாலுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று!


அம்பாறை சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீவிபத்துக்குள்ளான எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் மாலுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பணிக்குழாமினர் மற்றும் தலைமை மாலுமி உள்ளிட்டோர் கட்டம் கட்டமாக மீட்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 39 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இவ்வாறு தொற்று உறுதியானவர்களது விபரங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில், செங்கடல் பிராந்தியத்தை சேர்ந்த கடலேடி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு செங்கடல் பிராந்தியத்தை சேர்ந்த குறித்த கடலோடி எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் மாலுமிகளில் ஒருவரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE